அழகர் திருவிழா முன்னிட்டு தாம்பரம்-மதுரை இடையே இன்று இரவு சிறப்பு ரயில்

3 hours ago 2

சென்னை: அழகர் திருவிழா முன்னிட்டு தாம்பரம்-மதுரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மதுரை அழகர் திருவிழா முன்னிட்டு பலரும் மதுரைக்கு செல்வார்கள். இதனால் ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை கருத்தில் தாம்பரம்-மதுரை இடையே இன்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமார்க்கமாக 12ம் தேதி மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு 13ம் தேதி காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம்,செங்கல்பட்டு,திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம்,அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அழகர் திருவிழா முன்னிட்டு தாம்பரம்-மதுரை இடையே இன்று இரவு சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Read Entire Article