மாநகராட்சியின் 9 விளையாட்டு திடல்களை தனியார் பராமரிக்கும் தீர்மானம் ரத்து

6 months ago 21

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செயற்கை புல்தரை அமைக்கப்பட்ட 9 விளையாட்டுத் திடல்களை தனியார் பராமரிக்க அனுமதிக்கும் மன்ற தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி வசம் உள்ளசெயற்கை புல்தரை அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டுத் திடல்களான வியாசர்பாடி முல்லைநகர், வேப்பேரி நேவல் மருத்துவமனை சாலை, திருவிக நகர் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட 9 விளையாட்டுத் திடல்களை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி முடிவு செய்தது. இத்திடல்களை பயன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கவும் திட்டமிட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் டெண்டர் கோரவும் நடவடிக்கை எடுத்து வந்தது.

Read Entire Article