மாநகராட்சி மண்டலங்கள் 20 ஆக உயர்வு: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர் நேரு விரைவில் ஆலோசனை

2 months ago 11

சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அதை அமல்படுத்துவது தொடர்பாக எம்.பி., எம்எல்ஏ.க்களுடன் அமைச்சர் கே.என்.நேரு விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. 15 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி மண்டலங்களுக்குட்பட்ட நிர்வாக பகுதிகளை, தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்தது.

Read Entire Article