மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கடைகளுக்கு முழு கரோனா ஊரடங்கு காலத்துக்கும் வாடகை தள்ளுபடி வழங்க வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நாகர்கோவில் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வரும் நாராயணன் உள்ளிட்டோர் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த 24.3.2020 முதல் 6.9.2020 வரை, உரிமக் கட்டணம் மற்றும் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி, கரோனா ஊரடங்கு காலம் முழுமைக்கும் உரிமக் கட்டணம், வாடகைத் தள்ளுபடி வழங்குமாறு 2021 பிப். 1-ம் தேதி உத்தரவிட்டார். இதற்கு எதிராக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.