ஈரோடு தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது

4 hours ago 1

ஈரோடு சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஞானசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களையும், நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம் என ஐ.ஜி. செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

The post ஈரோடு தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article