மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து

2 months ago 8

 

கோவை, டிச. 3: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேயர் ரங்கநாயகி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று (செவ்வாய்) காலை 11 மணிக்கு நடைபெற இருந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம், நிர்வாக காரணங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

The post மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article