கடலூர்,
வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசிகளாக மாற்றி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், சல்மான் கான், வினோத் குமார், கலைவாணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2,500 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.10-க்கு வாங்கப்படும் மாத்திரையை 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அரியானாவில் இருந்து ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம் மூலம் மாத்திரைகளை கொண்டு வந்து மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.