மாணவி வன்கொடுமை வழக்கில் எஃப்ஐஆர் கசிந்த விவகாரம்: காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை

1 week ago 2

புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கில் போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) கசிந்து, பாதிக்கப்பட்ட மாணவியை பற்றிய அனைத்து விவரங்களுடன், எவ்வாறு சம்பவம் நடந்தது என்ற முழு தகவல்களும் வெளியாகின.

Read Entire Article