டெல்லியில் அதிமுகவுக்கு புதிய அலுவலக கட்டிடம்: காணொலி மூலம் பழனிசாமி திறந்து வைத்தார்

3 months ago 13

அதிமுக சார்பில் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார்.

புதுடெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். இதன்படி, புதுடெல்லியில் எம்.பி.சாலை, சாகேத் பகுதியில் 10 ஆயிரத்து 850 சதுரடி பரப்பு கொண்ட இடத்தை கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வாங்கினார். அவரால் கடந்த 2015-ம் ஆண்டு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் அங்கு தொடங்கப்பட்டது. சுமார் ரூ.10 கோடியில் 13 ஆயிரத்து 20 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

Read Entire Article