மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்

2 weeks ago 2

கிருஷ்ணகிரி, ஜன.23: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கம்பம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 20வயது இளம்பெண். இவர் பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில், பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20ம் தேதி, வீட்டில் இருந்த கல்லூரி மாணவி வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவர், தங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Read Entire Article