திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்த நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி காலை கோவில் திரு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டர் பிரம்மதத்தர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்
நாளை (பிப்ரவரி 13) முதல் வருகிற 17-ம் தேதி வரை தினமும் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை, களபாபிஷேகம் நடக்கிறது. நாளை காலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை நெய் அபிஷேகமும், 16-ம் தேதி மாலை சஹஸ்ர கலச பூஜையும், 17-ம் தேதி சஹஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது.