மாசி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

3 months ago 7


திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார். இதன் பின்னர் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆழியில் தீ மூட்டினார். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தினமும் காலையில் நெய்யபிஷேகமும், இரவில் படிபூஜையும் நடைபெறும். வரும் 17ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். நேற்று நடை திறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருந்தனர். ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

The post மாசி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article