வண்டலூர்: தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பணியிலும், வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
‘காவல் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து 11-வது தேசிய மாநாடு வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நேற்று முன்தினம் தொடங்கியது இரண்டு நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார். நேற்று நடைபெற்ற மாநாட்டு நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.