மழை முன்னெச்சரிக்கை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

4 months ago 23

சென்னை,

சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மேற்கொண்ட வெள்ள தடுப்புப்பணிகள் குறித்து அறிக்கை வெளியிடவேண்டும். வெள்ள நீர் தேங்குவதில் இருந்து பாதுகாக்க அமைத்த குழு அளித்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன..? குழுவின் அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மீட்பு, நிவாரணப் பணிகளை போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும். 2021-ல் அமைத்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா..? திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன..? எத்தனை சதவீத பணிகள் முடிவடைந்தன உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாக கூற வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Read Entire Article