மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் மீண்டும் ஐதராபாத்துக்கே திரும்பிச் சென்ற விமானம்

5 months ago 15

சென்னை: 72 பயணிகளுடன் சென்னை வந்த அலையன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் ஐதராபாத்துக்கே திரும்பிச் சென்றது. பலத்த மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரமாக அலையன்ஸ் விமானம் வட்டமடித்தது. பகல் 12 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் வானிலை சீரடையாததால், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை ஐதராபாத்துக்கே திருப்பி அனுப்பினர்.

The post மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் மீண்டும் ஐதராபாத்துக்கே திரும்பிச் சென்ற விமானம் appeared first on Dinakaran.

Read Entire Article