சென்னை: மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக உதகை செல்கிறார். உதகையில் மே 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்குகிறார். தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்
The post மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகைக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.