சென்னை: மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறைதண்டனை அளிக்க
சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மருத்துவக் கழிவு பொது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அண்டை மாநில மருத்துவக் கழிவுகள் நமது மாநிலத்தில் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் பெறப்படுகின்றன. மருத்துவக் கழிவுகளை கொட்டினால், விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்.
The post மருத்துவக் கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை: சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.