சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளிக்கு ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மருந்து பெட்டகம் வழங்கவிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (18.12.2024) சென்னை, சைதாப்பேட்டை, வாழைத்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.