மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் சைவ மந்திரங்கள் ஓத அனுமதி கோரி வழக்கு

3 hours ago 2

சென்னை: மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி அன்று நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் சைவ மந்திரங்கள் ஓத அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சேவா அறக்கட்டளைத் தலைவரான டி.சுரேஷ்பாபு, தாக்கல் செய்துள்ள மனுவில், “கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்.4-ம் தேதி அன்று குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ் கடவுளான மருதமலை முருகன் கோயில் அருணகிரிநாதரால் பாடல்பெற்ற திருத்தலம் மட்டுமின்றி, கோயில் அருகே உள்ள மலைக் குகையில் பாம்பாட்டி சித்தர் யோக நிலையில் ஜீவசமாதியடைந்த முக்கிய தலமாகவும் விளங்குகிறது.

Read Entire Article