.மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

4 months ago 13

தர்மபுரி, ஜன.4: பாலக்கோடு அருகே உள்ள இலங்காளப்பட்டி பூவன்கெட்டாய் பகுதியை சேர்ந்தவர் சேகர் (50), விவசாயி. இவர் நேற்று முன்தினம், தென்னை மரத்தில் ஓலையை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post .மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு appeared first on Dinakaran.

Read Entire Article