மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கல்

2 months ago 6

 

மயிலாடுதுறை,டிச.10: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலைத் திருவிழா போட்டியில் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு குடை வழங்கும் நிகழ்ச்சி ஆதீன வளாகத்தில் நடந்தது. தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ல கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலைத்திருவிழா மாநில போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ள மாணவர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து தொடக்கப்பள்ளியில் பயிலும் 700 மாணவர்களுக்கு குடைகள் வழங்கி அருளாசி வழங்கினார். இதில் சிவகுருநாததம்பிரான் சுவாமிகள், பெங்களூர் மதுசூதனன், ஆதீன பொதுமேலாளர் ரங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article