திருமலை: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அருண்குமார் என்பவரின் மனைவிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இளம்பெண் பீமாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அருண்குமாரின் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தனது மனைவி மீது வழக்குப்பதிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த அருண்குமார்(45), கடந்த 20ம்தேதி இரவு, அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் சென்றார். அங்கு தனியாக இருந்த அவரிடம் தனது மனைவி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதனால் அருண்குமார், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் இந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்திலும் உனது குடும்பத்தினருக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
The post மனைவி மீது புகார் கொடுத்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் கைது appeared first on Dinakaran.