மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் போலீசாருக்கு எஸ்பி உத்தரவு சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான

1 month ago 5

திருவண்ணாமலை, ஏப். 17: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்பி தலைமையில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் 45 பேர் மனு அளித்தனர். திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், வாராந்திர சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று எஸ்பி சுதாகர் தலைமையில் நடந்தது. அதில், ஏடிஎஸ்பிகள் பழனி, சிவனுபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 45 பேர் மனு அளித்தனர். பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி சுதாகர், உரிய விசாரணை நடத்தி தீர்வு காண சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில், வழக்கம் போல பாகப்பிரிவினை மற்றும் சொத்து தகராறு தொடர்பான மனுக்களை அதிக அளவில் அளிக்கப்பட்டன. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பான மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும், வழக்குப்பதிவு செய்ததும், குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்படாமல் விரைந்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

The post மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் போலீசாருக்கு எஸ்பி உத்தரவு சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான appeared first on Dinakaran.

Read Entire Article