மனித உரிமைகள் தின உறுதிமொழி

2 months ago 11

 

நாகர்கோவில், டிச.11: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மனித உரிமை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன்.

எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியேற்றனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), செந்தில்வேல்முருகன் (நிலம்), செந்தூர் முருகன் (தேர்தல்), மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெங்கின் பிரபாகர், உசூர் மேலாளர் சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கண்ணன், தாசில்தார்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மனித உரிமைகள் தின உறுதிமொழி appeared first on Dinakaran.

Read Entire Article