‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு...’ - ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!

5 hours ago 1

வரும் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தங்களது கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. திமுக கூட்டணியில் அவர் நினைப்பது சாத்தியப்படுமா என்று தெரியாத நிலையில், கோவையில் இம்முறை தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என மதிமுக-வினர் உரிமைக் கொடி தூக்கி இருக்கிறார்கள்.

பஞ்​சாலை​கள், தொழில் நிறு​வனங்​கள், தொழிற்​சாலை​கள் அதி​கம் உள்ள கோவை மாவட்​டத்​தில் மதி​முக-வுக்கு குறிப்​பிடத்​தக்க செல்​வாக்கு உண்​டு. இப்​போதும் வைகோ கோவைக்கு வந்​தால் விமான நிலை​யத்​தில் திரளும் தொண்​டர்​களே அதற்கு சாட்​சி. மதி​முக-வை வைகோ தொடங்​கிய போது அவருக்கு பின்​னால் நின்ற தளகர்த்​தர்​களில் ஒரு​வ​ரான முன்​னாள் அமைச்​சர் மு.கண்​ணப்​பன் உள்​ளிட்​டோர் இப்​பகு​தி​யைச் சேர்ந்​தவர்​களே. இத்​தனை இருந்​தா​லும் கோவை பகு​தி​யில் போட்​டி​யிட மதி​முக பெரி​தாக மெனக்​கிட்​டது இல்​லை.

Read Entire Article