சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டுமல்ல; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையம் ஓரணியில் திரட்டும் முயற்சியாகும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வலியறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் திமுக சார்பில் தேர்தலுக்கான பல முன்னெடுப்புகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.