போச்சம்பள்ளி, பிப்.22: மத்தூர் அருகே உள்ள மேக்கலாம்பட்டி புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலையன் (64), விவசாயி. இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை பாலையன் மேக்கலாம்பட்டி என்ற இடத்தில் சாலையை கடந்தபோது, அந்த வழியாக வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி, பாலையன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலையன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மத்தூர் அருகே லாரி மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.