மத்திய பட்ஜெட்டால் வெறும் 2 கோடி பேருக்கு மட்டுமே பலன்: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி புகார்

1 week ago 2

புதுடெல்லி: மத்திய அரசின் பொது பட்ஜெட்டால் வெறும் 2 கோடி பேருக்கு மட்டுமே பலன் கிடைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதை நாடாளுமன்ற மக்களவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. கே.நவாஸ்கனி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் எம்பியான கே.நவாஸ்கனி மக்களவையில் பட்ஜெட் மீதானப் பொதுவிவாதத்தில் பேசியதாவது: “மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வாசித்தது பாஜகவின் தேர்தல் அறிக்கை அல்ல, நாட்டின் நிதிநிலை அறிக்கை. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு ஒரு முக்கியத்துவமும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மாற்று பார்வையும் கொண்டதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. பிஹார் மாநிலத்துக்கு தேர்தல் வர இருப்பதால் பல திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. எங்கள் தமிழ்நாடு முன்வைத்த நெடுஞ்சாலை திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், கோவை மதுரை மெட்ரோ ரயில் நிதி, மதுரை எய்ம்ஸ் நிதி என எதைப் பற்றியும் வாய் கூட திறக்காதது உள்ளபடியே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

Read Entire Article