மதுரை: நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்: மத்திய அரசின் பட்ஜெட்டில் நிறைய வரவேற்கத்தக்க அறிவிப்புகள் உள்ளன. தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்வு, மூத்த குடிமக்களுக்கு வட்டி வரம்பு உள்ளிட்ட நிறைய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.