மாமல்லபுரம்: தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் நடைபெற்ற முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, கருப்புக்கொடி காட்டுவதற்காக தனியார் விடுதியில் தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் விஸ்வநாதன் உட்பட 2-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை முன்னெச்சரிக்கையாக போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின், பேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணை தலைவர் ஜகதீப்தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் 8 மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக விழா நடைபெற்ற சொகுசு விடுதிக்கு வந்தார்.