மதுரை: மதுரையில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் இரண்டு விமானங்கள் வானில் வட்டமடித்தன. 40 நிமிட தாமதத்துக்கு பின்பு இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறங்கின.
மதுரையில் அடுத்தடுத்து கனமழை பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்று இரவு 8.30 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 30 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த விமானமும் மற்றும் பெங்களுருவில் மதுரை வந்த விமானமும் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றன. பலத்த இடிமின்னலுடன் பெய்த கனமழையால் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க சிக்னல் கிடைக்காமல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் வானத்தில் வட்டமிட்டது.