மதுரை: மதுரை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 507 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாக சொந்தம் விட்டுபோக கூடாது, சொத்துகளுக்கு ஆசைப்பட்டு 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்கின்றனர். போதிய விழிப்புணர்வு இன்றி கிராமப்புறங்களில் இன்றைக்கும் இது தொடரும் அவல நிலை உள்ளது. மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் என்ஜி.மோகன். இவர், மதுரை மாவட்டத்தில் 2020 முதல் 2024 வரை தடுக்கப்பட்ட குழந்தைத் திருமணங்கள் எத்தனை? இது தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கு விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மதுரை மாவட்ட சமூக நலத் துறை அதிகாரியிடம் கேட்டிருந்தார். இதற்கு சமூக நலத்துறை அதிகாரி பதில் அளித்துள்ளார்.