புதுடெல்லி: இந்திய ராணுவ நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாஜக முன்னாள் எம்.பி வருண்காந்தி பாராட்டியுள்ளார். “மனிதநேயத்தையும் நீதியையும் பாதுகாப்பதில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்பதை உலகுக்கு உறுதியுடன் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் வலிமையான தலைமை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சவாலான தருணங்களில், நமது ராணுவத்துடன் ஒரு பாறை போல நிற்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. இது வெறும் போர் மட்டுமல்ல, இரண்டு சித்தாந்தங்களின் மோதல். இதற்கு முழு உலகமும் சாட்சியாக உள்ளது. மனிதநேயம், அமைதி மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலரான இந்தியா ஒரு பக்கம் உள்ளது. மறுபுறம் வெறித்தனம், உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் அடையாளமாக மாறிய பாகிஸ்தான்.