ஜிப்மர் ஊழியர்களின் விடுமுறை ரத்து: மே 13-க்குள் அனைவரும் பணியில் இணைய உத்தரவு

7 hours ago 3

புதுச்சேரி: நாட்டில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ஜிப்மர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், 13-ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் பணியில் சேருமாறும் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் அனைத்து துறைகளுக்கும் பிறப்பித்த உத்தரவின் விவரம்: “நாட்டில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உருவாகி வரும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தயார் நிலையில் இருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

Read Entire Article