மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை பராமரிப்பு: மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

3 days ago 2

புதுடெல்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், இதுவரை, 46.3 கி.மீ சாலைக்கான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் டிசம்பர் 2025-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்தார்.

மக்களவையில் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, தேசிய நெடுஞ்சாலை (என்ஹச்-38)-ல், “மதுரை - தூத்துக்குடி பகுதியில் பராமரிப்பு பிரச்சினைகள் தொடர்பாக வரும் பல்வேறு புகார்கள் குறித்து அரசுக்குத் தெரியுமா? அவற்றைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்தச் சாலை மோசமாகப் பராமரிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

Read Entire Article