மதுரை திருநகர் வழக்கிலும் கைதாகிறார் நடிகை கஸ்தூரி 

3 months ago 17

மதுரை: திருநகர் வழக்கிலும், நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவார் என, போலீஸார் தெரிவித்தனர்.

சென்னையில் சமீபத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அங்கு அவர் பேசியபோது, தெலுங்கு மக்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்பின், கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

Read Entire Article