விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி

4 hours ago 4

அரசுப் பள்​ளி​யில் ஆசிரியர் தாக்​கிய​தால் பாதிக்​கப்​பட்ட மாணவர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதையடுத்து, மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

விழுப்​புரம் மாவட்​டம் கோலியனூர் அரு​கே​யுள்ள வி.அகரம் கிராமத்​தில் அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்​பள்​ளி​யில் நேற்று முன்​தினம் 6-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், தன்​னுடன் பயிலும் சக மாணவி ஒரு​வருடன் சண்​டை​யிட்​டு, கையால் அடித்​துள்​ளார். இதைக்​கண்ட உடற்​கல்வி ஆசிரியர் செங்​கேனி சண்​டையை தடுத்து நிறுத்​தி, அந்த மாணவரை அடித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

Read Entire Article