மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கடைக்குள் புகுந்து தாக்குதல்

2 months ago 11

மதுரை: மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கடைக்குள் புகுந்து தாக்கிய நபரால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சங்கரா நகரில் தனியார் ஜெராக்ஸ் கடையில் லாவண்யா என்ற இளம்பெண் 4 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா(25) என்பர் தன்னை காதலிக்க வற்புறுத்தி தினமும் தொல்லை கொடுத்ததாக லாவண்யா தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சித்திக் ராஜா, லாவண்யாவிடம் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மறுத்த லாவண்யாவை கடைக்குள் புகுந்து சித்திக் ராஜா சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரை ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லாவண்யா படுகாயம் அடைந்திருப்பதால் அக்கமபக்கத்தினர் அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மதுரையில் இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, இளைஞர் ஒருவர் கடுமையாக தக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கடைக்குள் புகுந்து தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article