கள்ளக்குறிச்சி: மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை; ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது என்று கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தை அடுத்து, தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டிய நிலையில், சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
The post மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை; கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.