மதுரை: ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.3 லட்சம் பணம்: வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ஓட்டுநர்

5 months ago 16

மதுரை; மதுரையில் பயணி ஒருவர், ஆட்டோவில் தவற விட்ட ரூ.3 லட்சம் பணத்தை ஓட்டுநர் நேர்மையாக வீட்டுக்கே சென்று ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றாம் பகுதி குழு முன்னாள் பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.பிச்சை. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் கடந்த 12-ம் தேதி அன்று மதுரை 67-வது வார்டு டோக் நகரை சேர்ந்த சிவா என்பவரின் குடும்பத்தினர், பயணம் சென்றுள்ளனர். இவர்கள், ஒரு நகை வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்றுள்ளனர்.

Read Entire Article