மதுரை: ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலி

1 week ago 2

மதுரை ,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த சேடபட்டி அருகே அல்லிகுண்டம் கிராம கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன் பாண்டி (வயது 17). பிளஸ்-2 மாணவரான இவர், மேடை அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒலிபெருக்கி மற்றும் மின்விளக்குகளுக்காக அமைத்திருந்த மின்ஒயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை கவனிக்காத நிலையில் மாணவர் பாண்டி மீது அந்த மின் ஒயர் பட்டதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே அங்கிருந்தவர்கள் மாணவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, ஏற்கனவே பாண்டி இறந்துவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Entire Article