மதுரை அரசு மருத்துவமனையில் இடிந்த மேற்கூரை சீரமைப்பு: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்

4 months ago 25

மதுரை: அரசு மருத்துவமனையில் இடிந்துவிழுந்த மேற்கூரை சீரமைக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பில்உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சில நாட்களுக்கு முன்னர் நோயாளிகள் பதிவு செய்யும் இடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் அங்கிருந்த கம்ப்யூட்டர் சேதமடைந்தது. எனினும், பொதுமக்கள், நோயாளிகள் யாரும் காயமடையவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்றது.

Read Entire Article