மதுரை அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் ‘துயர்நிலை ஆலோசகர்’ உதவி மையம்

6 hours ago 5

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநிலத்திலேயே முதல் முயற்சியாக விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காய தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் நிலைமை குறித்து பயம், பதற்றத்துடன் இருக்கும் உறவினர்களுக்கு முழுமையாக விளக்கும் வகையில் ‘துயர்நிலை ஆலோசர்’ உதவி மையம் நாளை (மே 22) துவக்கப்படுகிறது.

விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிர் காக்கும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சி்கிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கிற்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுவர். அப்போது உறவினர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் நோயாளிகளின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாமல் உறவினர்கள் பதற்றத்துடன் இருப்பர்.

Read Entire Article