மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கிளியாற்றில் குளித்த 12ம் வகுப்பு மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்நிலையில், நிவாரணம் வழங்ககோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் புவனேஷ்(16). மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லக்கூடிய கிளியாற்றில் நண்பர்கள் சிலருடன் புவனேஷ் கடந்த 15ம் தேதி மாலை குளித்ததாக தெரிகிறது.