மது பதுக்கி விற்ற 2 பேர் கைது; 35பாட்டில்கள் பறிமுதல்

4 months ago 23

ஊத்தங்கரை, அக்.10: ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார் காரப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (59) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், சாமல்பட்டி எஸ்ஐ ஜெயகாந்தன் மற்றும் போலீசார், குன்னத்தூர் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அருணாசலம்(61) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது பதுக்கி விற்ற 2 பேர் கைது; 35பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article