மண் அள்ளிய லாரி, பொக்லைன் பறிமுதல்

4 months ago 11

கிருஷ்ணகிரி, ஜன.4: கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில், ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சிலர் டிப்பர் லாரியில் ெபாக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளி கொண்டிருந்தனர். அதிகாரிகள் வருவதை பார்த்ததும், பொருட்களை அப்படியே போட்டு விட்டு நாலாபுறமும் தப்பியோடினர். இதையடுத்து டிப்பர் லாரி மற்றும் பொக்லைனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தின் டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

The post மண் அள்ளிய லாரி, பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article