சென்னை: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 4 மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள்சுப்பிரமணியம், குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்னையாக இருக்கிறது. நித்யானந்தா இந்தியாவில் இல்லை. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
The post மடங்களுக்கு தக்கார் நியமனம் எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி appeared first on Dinakaran.