இரு பேருந்துகள் மோதி விபத்து: ெபாலிவியாவில் 37 பேர் பலி

15 hours ago 3

பொலிவியா: பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 37 பேர் பலியாகினர். பொலிவியா நாட்டின் உயுனி – கொல்சானி இடையேயான நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்க கொண்டன. அந்த இரண்டு பேருந்துகளிலும் திருவிழாவிற்கு மக்கள் சென்று வந்தனர்.

இந்த விபத்தில் 2 குழந்தைகள், பெண்கள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்துக்குள்ளான பேருந்து ஒன்றில், உயுனியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லத்தீன் அமெரிக்காவின் கார்னிவல் விழாவிற்கு மக்கள் சென்றனர்.

இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. விபத்தில் இறந்தவர்களின் அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பேருந்தின் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் தற்போது நலமுடன் உள்ளார். காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்’ என்றனர்.

The post இரு பேருந்துகள் மோதி விபத்து: ெபாலிவியாவில் 37 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article