காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாவட்ட அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 622 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சார் கலெக்டர் ஆஷிக் அலி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர் appeared first on Dinakaran.