திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 133 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 55 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 58 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 36 மனுக்களும், இதரதுறைகள் சார்பாக 72 மனுக்களும் என மொத்தம் 354 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன், சத்தியபிரசாத், தனித்துணை கலெக்டர் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம், தீபா, தனித்துணை ஆட்சியர் (நிலம்) செல்வராணி மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 354 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.